பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6
வாக்காளர்களுக்கு வள்ளுவரின் அறிவுரைகள்

மனித சமுதாயத்தில் சொத்துரிமை பற்றிய கருத்து தோன்றிய காலத்திலிருந்து அரசியல் சிந்தனை, ஆட்சி முறை, ஆட்சிக்குரிய விதிமுறைகள் முதலியன தோன்றி வளர்ந்து வந்துள்ளன. இவை காலத்திற்குக் காலம் படிமுறையில் வளர்ந்து வந்துள்ளன. ஆட்சிமுறை, கூட்டாட்சியில் தொடங்கித் தனிமனித ஆட்சிக்குமாறி மீண்டும் கூட்டாட்சிக்கு-மக்களாட்சி முறைக்கு மாறி வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இன்றைய உலகில் பெரும்பான்மையான நாடுகள் சுதந்தரத் தன்மையுடைய தன்னாட்சி முறையில் இயங்குகின்றன. மக்களாட்சி முறையில் இயங்கும் நாடுகள் பலப்பல. அவற்றுள் நமது நாடும் ஒன்று. 1947ஆம் ஆண்டு அடிமைத் தளையிலிருந்து மீண்ட இந்தியாவில் இப்போது மக்களாட்சி முறை நடைபெறுகிறது. ஆம்; இந்தியா இன்று குடியரசு நாடு. நமது இந்திய நாட்டில் பிறந்தவர்கள் 21 வயதை அடைந்த அனைவரும் சாதி, இன, சமய, பொருளாதார ஏற்றத் தாழ்வு எந்தவகை வேறுபாடுமின்றி அரசியலில் பங்கு பெறும்

தி.IV.18.