இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
290
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.’
(517)
என்ற திருக்குறளின்படி நாட்டின் நலிவை நீக்கி, நல்வளந்தர, மொழி வளர, கல்வி-அறிவு பெருகி வளர, ஆள்வினையும் தொழில் வினையும் பெருகி வளரத் தக்க வகையில் எந்தக் கட்சியால் ஆட்சி செய்ய இயலுமோ அந்தக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். இது வாக்காளர்கள் கடமை.