பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7
வாழ்க்கைத் துணைநல வாழ்த்து
1

திருக்குறள், குடும்பத் தலைவியை “வாழ்க்கைத் துணை நலம்” என்று போற்றுகிறது. தலைவனுக்குத் தலைவி இல்லறத்துக்கு வாய்த்த துணை என்று வாளா கூறாமல் அதன் பயனாகவே “துணை நலம்” என்று சொல்லும் பாங்கை உய்த்தறிக.

கற்பு, நுண்ணிய நலமுடையது. அன்பின் ஆக்கம் கற்பு. மனம், வாக்கு, உடலைக் கடந்தது கற்பு. இத்தகு புனிதக் கற்பைச் சிறை காக்க இயலாது. தலைவனாலும் காத்தல் இயலாது. ஆதலால் ‘தற்காத்து’ என்றார். காமம் ஒரு பசி. பசி தீர்ந்துழியன்றி வேட்கை தீராது. கணவனின் கற்பினைப் பேணிக் காக்க வேண்டிய பொறுப்பும் தலைவியிடமே உள்ளது. ஆம்! தலைவனைப் பரத்தையின் வழிச் செல்லாமல் தடை செய்து காத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, தலைவியினுடையதேயாம்.

தலைவன்-கணவன் புகழ் பெரியது. அது வழிவழியாக ஈட்டப்பட்டதாகக் கூட அமையலாம். கணவன் பீடுநடை போட வேண்டுமானால், தலைவி-வாழ்க்கைத் துணை நலம்