இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
1
எழுத்துக்களுக்கு அகர முதலாதல் போல, இந்த உலகத்திற்கு இறைவன் முதலாவான்.
பொருள்
முதல் என்பது இறைவன் உலகத்திற்குக் காரணம் என்பதும் முதல்வன் என்பதும் கருத்து.
2. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
3
நினைப்பவர் மனத்தின்கண் கோயில் கொண்டருளும் இறைவனின் திருவடிகளை நினைத்து தொழுபவர் நிலத்தின் கண் நீண்ட காலம் வாழ்வர்.
பொருள்
வழிபாட்டின் பயன் மறுமை நலன் மட்டுமன்று; இம்மை நலனும் ஆம்.