பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16
குறள் நூறு

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

1

எழுத்துக்களுக்கு அகர முதலாதல் போல, இந்த உலகத்திற்கு இறைவன் முதலாவான்.

பொருள்

முதல் என்பது இறைவன் உலகத்திற்குக் காரணம் என்பதும் முதல்வன் என்பதும் கருத்து.

2. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

3

நினைப்பவர் மனத்தின்கண் கோயில் கொண்டருளும் இறைவனின் திருவடிகளை நினைத்து தொழுபவர் நிலத்தின் கண் நீண்ட காலம் வாழ்வர்.

பொருள்

வழிபாட்டின் பயன் மறுமை நலன் மட்டுமன்று; இம்மை நலனும் ஆம்.