352
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பொருள்
சிறந்த வாழ்க்கைத் துணை, தன் கணவனின் ஒழுக்கச் சிறப்பிற்கும் துணையாயிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
9. பெறும்அவற்றுள் யாம்அறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.
பெறக் தகுந்த பேறுகளில் அறிவார்ந்த உணர்விற் பெறும் மக்கட்பேறே சிறந்தது. மற்றப் பேறுகள் நம்மால் மதிக்கத் தக்கன அல்ல.
பொருள்
நல்லறிவு உணர்விற்பெறும் மக்கட்பேறின்றி, பெறக்கூடிய பெரும் பேறு வேறெதுமில்லை.
10. அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு.
ஆருயிருக்கு, எலும்பொடு கூடிய உடல் இயைத் திருப்பது, அன்போடு பொருந்தி வாழும் வழக்கத்திற்கே.
பொருள்
அன்பு, உயிர்க்குப் புதியதன்று; அன்பு செய்தல் உயிரின் வழக்கம். அவ்வழக்கத்தைச் செயல் முறைப்படுத்தவே உடம் போடு உயிர் கூடிற்று.
11. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
விருந்தோம்பி எஞ்சியதை உண்ணும் இயல்புடையவன், நிலத்திற்கு விதையும் விதைக்கவேண்டுமோ?