பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பொருள்

ஒருவர் விரும்பும் சொற்களையே சொல்லுதல் என்பது சான்றோராலும் இயலாதது. விருப்பம், மனப்பான்மையைப் பொறுத்தது. ஒருவர் விரும்பும் சொற்களைக் கூறுவதைவிட, அவர்க்கு நன்மை பயக்கும் சொற்களைக் கூறுதலே சான்றோர் கடமை. பயனிலாத சொற்களைக் கூறுவதால் பயனுக்கு மூலமாக இருக்கின்ற நேரமும் கெடும். அதனால் பயனற்ற சொற்களைக் கூறக்கூடாது.

24. தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

202

தீயவை தீமையையே தருவதால், நன்மையும் தீமையும் கலந்து தரும் தீயினும் அஞ்சப்படும்.

பொருள்

தீ, உணவு ஆக்குவதற்குத் துணைசெய்கிறது. தீமையோ எட்டுணையும் நன்மை செய்வதில்லை. ஆதலால் தீயினும் தீமை அஞ்சப்படும்.

25. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதிே
ஒப்புரவின் நல்ல பிற.

213

தேவருலகத்தும் இந்நிலவுலகத்தும் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழ்வதற்கு ஒப்புரவைப் போன்றதோர் உயர் பண்பைக் காண்பதரிது.

பொருள்

ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்ற கூட்டுறவு வாழ்வியலே ஒப்புரவு. அதனிற் சிறந்த அறம் எங்கும் இல்லை.

26. ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

214