குறள் நூறு
359
உயிர் நலமறிந்து பிறர்க்குதவியாக ஒப்புரவு நெறி நின்று ஒழுகுபவனே உயிர் வாழ்கின்றவன். அங்ஙனம் வாழாதவன் இறந்தவரோடு இணைத்து எண்ணப்பெறுவான்.
பொருள்
உயிரின் இயற்கை அன்பு காட்டுதலே; அவ்வழி ஒழுகா விடின், உயிரின் அடையாளம் இன்மையாகும்.
27. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
பசியைப் பொறுத்துக் கொண்டு, உண்ணாமல் தவம் செய்வாரின் ஆற்றலைவிட உயிர்க்குலத்தின் பசிக்கு, உணவு முதலியன வழங்கி அதை மாற்றுவாரின் ஆற்றல் சிறப்புடையது.
பொருள்
பசியைப் பொறுத்துக் கொண்டு தவம் செய்தல் தற்சார்புடையது; அஃது எளிதில் கூடும். உயிர்க்குலத்தின் பசியை மாற்றுதல் பிறர் நலம் பேணும்பணி. ஆதலின் இப்பணியே சிறப்புடையது.
28. தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
பலர் முன் தோன்றும் பொழுது, புகழோடு தோன்றுக. அஃது இயலாதாயின் தோன்றா திருத்தலே நல்லது.
பொருள்
புகழோடு விளங்கமுடியாத துறையில் தோன்றாதிருத்தல் நல்லது.
29. வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.