பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அருளின்மையின் காரணமாகத் தன்னிலும் மெலியாரைத் துன்புறுத்த விரும்பிச் செல்லும் பொழுது, தன்னை விட வலியார் ஒருவர் தன்னைத் துன்புறுத்த வரும்பொழுது தான் அஞ்சி நிற்கும் நிலைமையினை எண்ணுக.

பொருள்

துன்பத்திற்கு அஞ்சுபவர் பிறர்க்குத் துன்பம் செய்வானேன்?

30. தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறி தூன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

251

தம் உடம்பைக் கொழுக்க வைப்பதற்காக மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவனிடம் எங்ஙனம் அருளுணர்வு குடிகொள்ள முடியும்?

பொருள்

தன் உடம்பைக் கொழுக்க வைத்தல் என்பதே குற்றமுடைய தன்னலம். அதற்காகப் பிறிதின் ஊனை உண்பது மோசமான குற்றம். இவ்விரண்டுமுடையார் அருளுடையராதல் அரிது.

31. இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

270

இந்த உலகத்தில் செல்வர்கள் சிலரானது பிறர்க்கென முயலும் தவம் செய்வார் சிலரேயானமையால்தான்.

பொருள்

பிறர்க்கென முயலும் தவமிக்க தாளாண்மையுடையவர்கள் பலரானால், செல்வம் உடையாரும் பலராவர்.

32. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

280