364
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பொருள்
ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசை எல்லையில்லாதது. அதனால், செல்வம் பெற்றோம் என்ற மனநிறைவு ஆசையின் வழியில் இல்லை. வேண்டாமையே விழுமிய செல்வம்.
42. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.
ஊழால் நல்லன விளையும் பொழுது மகிழ்ந்து துய்ப்பவர், அதே ஊழால் துன்பம் விளையும் பொழுது வருந்துவது ஏன்?
பொருள்
முன் செய்த ஊழால் விளைவனவே இன்பமும் துன்பமும். ஊழின் வழி விளையும் இன்பத்திற்கு மகிழ்தலும் துன்பத்திற்கு நோதலும் மீண்டும் ஊழுக்கு வித்தாகும்.
43. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
காண்பதற்கு எளியவனாய்-கடும் சொல் கூறாதவனாய் இருக்கும் மன்னனுடைய நாட்டை உலகு புகழும்.
பொருள்
நாடாள்வோன் மக்களால் எளிதில் காணத்தக்கவனாகவும், குடிமக்களின் அச்சத்தினை நீக்குவதற்குக் கடுஞ்சொற் கூறாதவனாகவும் இருத்தல் வேண்டும்.
44. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.