பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறள் நூறு



369



பொருள்

குணமும் குற்றமும் எவர்க்கும் உரியன. ஆதலின் மிகுதி காண வேண்டும். குணம் குற்றங்களின் மிகுதி எண்ணிக் கையைப் பொறுத்ததன்று; ஏற்படும் பயனைப் பொறுத்தது.


57. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.

516

ஒரு செயலைச் செய்கின்றவனுடைய தன்மையையும் செயலின் தன்மையையும் ஆராய்ந்து அச்செயலுக்குரிய காலத்தையும் அறிந்து செயல்படுக.

பொருள்

ஒரு செயலில் முழுதாக வெற்றிபெற வேண்டுமானால், அச்செயலைக் செய்தற்குரிய தகுதியுடையவனும் அச்செயல் நிறைவேறுதற்குரிய காலமும் ஒத்திசைந்து அமைதல் வேண்டும்.

58. பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.

526

அள்ளி வழங்குபவனாகவும் சினமில்லாதவனாகவும் ஒருவன் விளங்கினால், உலகில் வேறு யாரையும் விடச் சுற்றத்தாரை அதிகம் பெறுவான்.

பொருள்

கொடையிருந்து சினமிருந்தாலும், பொறுமையிருந்து கொடையில்லாமற் போனாலும் சுற்றம் சூழாது.

59. அரியனன் றாகாத இல்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்.

537

மறவாக் கருவியாகிய மனத்தால் எண்ணிச் செயற்பட்டால், செய்தற்கு அரிய ஏதும் இல்லை.

தி.IV.24.