370
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பொருள்
மனத்தினால் எண்ணிச் செய்தல், மறதியைத் தவிர்க்கும் வழி; மறவாமை வந்த விடத்து எக்காரியமும் எளிதில் நிறைவேறும்.
60. குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
குடிகளைத் தழுவி ஆட்சி செலுத்தும் மன்னனின் அடிகளைத் தழுவி உலகு நிற்கும்.
பொருள்
செங்கோலுக்கு அழகு குடிகளைத் தழுவி நிற்றலே.
61. அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
முறையாக ஆட்சி செய்யாத அரசனின் செல்வத்தைக் கொடுங்கோன்மையால் துன்ப முற்று அழுத குடி மக்களின் கண்ணீரே தேய்த்து அழிக்கும்.
பொருள்
கொடுங்கோன்மையுடைய அரசனை அழிக்கப் படை தேவையில்லை. ஏழையர் அழுத கண்ணீரே போதும்.
62. கடிதோச்சி மெல்ல ஏறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
பன்னெடுங் காலத்திற்கு ஆக்கத்துடன் விளங்க விரும்புவர், மிகுந்த தண்டனை செய்வார் போலத் தொடங்கிக் குறைந்த தண்டனையை வழங்க வேண்டும்.