குறள் நூறு
375
பொருள்
குளிர் காய்வோர் தீயிடமிருந்து நெடுந்தொலைவிற்கு விலகினால் குளிரும். அதுபோல நாடாள்வோரிடமிருந்து நெடுந்தொலையில் விலகினால் பகைவர் வருத்துவர். ஆள்வோரை மிகமிக நெருங்கினால் அவர் தம் விருப்பு வெறுப்புத் துன்பம் தரும்.
75. குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
தன் குறிப்பறிந்து செயலாற்ற வல்லாரை, எது கொடுத்தேனும் உறுப்பாக்கிக் கொள்க.
பொருள்
குறிப்பறிந்து செயல்படுவோரைப் பெறுக.
76. அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
சொற்களின் விளைவறிந்த தூய்மை உடையோர், தாம் சொல்லப் புகுகின்ற அவையின் தகுதிப்பாடறிந்து அங்குச் சொல்லத்தக்கன இவையென அறிந்து சொல்லுக.
பொருள்
சொல்லப்படும் செய்திகளைவிடச் சொல்லும் இடம் நோக்கிச் சொல்லுதல் இன்றியமையாதது.
77. ஆற்றின் அளவறிந்து கற்க அவைஅஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு.
அவையில் அஞ்சாது விடை சொல்லுதற்குரிய நெறியும், சொல்லத்தக்க அளவு முறையும் அறிந்து கற்க.