பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பொருள்

தொடுக்கும் வினாக்களுக்கு விடைசொல்ல முடியாத கல்வி, பயனற்றதாகும்.

78. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

740

எல்லா வளங்களும் நிறைந்த நாடாயினும், செங்கோல் முறையற்ற நாடு பயனுடையதன்று.

பொருள்

நல்லாட்சி இல்லாத நாட்டில் வளங்கள் பேணப் படுவதில்லை. அதனால் பயனில்லை.

79. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்ல தரண்.

750

எத்தகைய பெருமையுடைய அரணாயினும் செயற் சிறப்பில்லாரிடத்து இவ்வரணின் பெருமை நில்லாதொழியும்.

பொருள்

அரணின் பெருமையைக் காப்பது செயலின் திறனே.

<poem>80. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.</poem

>

759

தொழில் செய்து பொருளை ஆக்குக. பகைவரின் செறுக்கறுக்கும் பொருட் சேர்க்கையினும் கூரிய வாள் வேறில்லை.

பொருள்

பொருளுடையார்க்குப் பகைவர் அடங்குவர். பொருள் என்பது, மனிதகுலத்தின் உயிர்வாழ்க்கைக் குரியதுவே.