பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விளக்கியிருப்பது தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைத்த பெரும் பேறாகும்.

இந்நூலுக்கு அரியதொரு அணிந்துரை வழங்கியுள்ள முனைவர் ஒளவை நடராசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

இந்நூல் ஆக்கத்திற்குப் பயன்படும் மணிவாசகர் பதிப்பக ச. மெய்யப்பன் அவர்களுக்கு நெஞ்சு நிறைந்த நன்றி. இந்த நூல் ஆக்கத்திற்குப் பாடுபட்ட ஆதீனக் கவிஞர். மரு. பரமகுரு, தமிழாகரர் தெ. முருகசாமி ஆகியோருக்கு நன்றிப் பெருக்கோடு கூடிய நல்வாழ்த்துக்கள்! தமிழ்ச் சமுதாயத்திற்கு ஒப்பற்ற வழிகாட்டியாக இந்நூல் விளங்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கின்றது. தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இவ் ஆக்கம் மேலும் மெருகு ஊட்டும். சங்க கால இலக்கியம் முதல் இக்கால இலக்கியங்கள் வரை புதிய பார்வை, சமுதாயத்திற்கு மிகுந்த பயனைத் தருவதாகும். இந்நூல் வெளிவருவதற்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்; நல்வாழ்த்துக்கள்!