பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமனும் சீதையும்

333


மாறாக இருப்பதை அவருடைய நினைவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

பிறிதொரு பெண் விரும்பாமல் அவளை இச்சித்தால் தலை வெடிக்கும் என்ற செய்தி வான்மீகத்திலோ, கம்பனிலோ இல்லை. ஆதலால் இவ்வழியிலும் பெரியார் வலிந்து, மரபு மீறி பாத்திரங்களைக் களங்கப்படுத்துகிறாரே தவிர, காவியத்தின் போக்கிலும் தமிழர் தம் கருத்திலும் இராமனும் சீதையும் பொற்புடையோர்! போற்றுதலுக் குரியவர்கள்!