பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தங்கத் தலைவி தருவார்!

359


“நிறை மொழி மாந்தர் முறைமையிற் கிளந்த
மறை மொழி தானே மந்திரம் என்ப”

என்ற நூற்பாவுக்கு, பேராசிரியர் உரையெழுதும்போது “தானே என்று பிரித்துக் காட்டியது தமிழ் மந்திரம் என்பது அறிவித்தற்கு” என்று கூறுகிறார். ஆதலால் தமிழில் பிற மொழிக் கலப்புக்கள், பிற நாகரிகக் கலப்புக்கள் ஏற்பட்டுப் பல நூற்றாண்டுகளாகி விட்டன! ஆனாலும் தமிழ், தனது தனித்தன்மையை இழந்து விடாமல் இருப்பது சிறப்பு. உலக மொழிகளிலேயே தனித்தியங்கும் ஆற்றலுடைய மொழி, தமிழ். அதுமட்டுமல்ல. இனிமையும் எளிமையும் பொருந்திய மொழி. பழந்தமிழ் இலக்கியங்கள் - அகத்தினை நூல்கள், புறத்திணை நூல்கள் அனைத்தும் தமிழருடைய வாழ்க்கையில் தோன்றியவை. பழந்தமிழ் இலக்கியங்களில் புனைந்துரைகளும் கற்பனைகளும் குறைவு. தமிழ் இலக்கியங்கள் கவிதை வடிவின. தமிழ், முத்தமிழாக வளர்ந்து வந்துள்ளது. கூத்து, இசை, இயல் என்ற வரிசையில் அவ்வத்துறையில் தமிழ் பெற்றுள்ள வளர்ச்சி பெருமைக்குரியது.

பழந்தமிழ் இலக்கியங்கள் பண்பாட்டுக் கருவூலங் களாகத் திகழ்கின்றன. பழந்தமிழரின் பண்புகள் காதல், கொடை வீரம் ஆகியனவாம். அகத்திணை முழுதும் காதற் கவிதைகளேயாம். காதற் கவிதைகளேயானாலும் பண் பாட்டுத் திறன்களை எடுத்துக்கூறத் தவறவில்லை. தமிழர் ஈத்துவந்து இன்பமார்வதில் விருப்பத்துடன் ஈடுபடுவர். பழந்தமிழர்கள் என்றும் படைமடம் பட்டாரில்லை. ஆனால் கொடைமடம் பட்டதுண்டு.

“பாத்திரம் அறிந்துபிச்சை யிடு” என்பது அயல்வழக்கு. தமிழர் வழக்கோ

‘மடவர் மெல்லியர் செவினும்
கடவன் பாரி கை வண் மையே!”