பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தமிழர் வாழ்வியல்

41



சங்ககாலத் தமிழர் வாழ்வியலில் பொருள் செய்யும் முயற்சி போற்றப் பெற்றது; பொருளை இழிவெனக் கருதும் கருத்து இருந்ததில்லை. ஆனால் பொருள் செய்யும் முயற்சியின் குறிக்கோள் உயர்ந்ததாக இருந்தது. வயது வந்த ஒவ்வொருவரும் தத்தம் முயற்சியில் பொருளிட்டியே வாழ வேண்டும் என்ற நடைமுறை இருந்திருக்கிறது. தந்தை பொருளிற்கூட மகன் வாழ்வதில்லை.

அதனால் தலைமகன் என்று பாராட்டப்படுவதின் உயர்நிலை வினை செய்தலாகவே இருந்தது. வினை என்பது இன்று குறிக்கும் பொருளில் பண்டு குறிக்கப் பெற்றதில்லை. வினை என்றால் தொழில் என்பதுதான் சங்ககாலத் தமிழ் வழக்கு.

“வினையே ஆடவர்க்கு உயிரே!”

என்று குறுந்தொகை கூறுகிறது.

பொருள் செய்யும் முயற்சியை ஒப்புக்கு யாரும் செய்வதில்லை. ஒரு முயற்சியை அச்சத்திற்காகவும் ஒப்புக்காகவும் மேற்கொண்டு செய்தால் அம்முயற்சி போதிய பயனைத் தராது. உள்ளம் ஒன்றிய உணர்வுடன் அம்முயற்சியில் - பொருள் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று பாலைக் கலி கூறுகிறது.

“புலம்பில் உள்ளமொடு பொருள்வயிற் செலீஇய”

என்பது கலித்தொகை வரி.

சங்கத்தமிழர், பொருளை உழைப்பின் வழியிலேயே ஈட்ட நினைத்தனர். வேறு வழிகளில் பொருள் ஈட்டுதலை அறம் - அன்றெனக் கருதியது மட்டுமல்லாமல், குற்ற மென்றும் கருதினர். பிறர்க்குரிய பொருளை அல்லது பங்கைத் திருடும் மனப்போக்கு, சங்ககாலத் தமிழர் வாழ்வில்

&. v. 4. -