பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருந்ததில்லை. இதனை, மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் அழகுறக் கூறுகிறார்.

“நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழிஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்...”

(மதுரைக் காஞ்சி 496 - 499)

என்றவாறு செந்நெறியில் பொருளீட்டி வாழ்ந்தது சங்கத் தமிழர் வாழ்வியலின் சிறப்பு.

நெடிய பயணத்திற்குப் பயன்படும் மகிழுந்துகளுக்குச் (Pleasure Car) சேமக்காற்றுருளை (Stepney) வைத்துக் கொள்வது இன்றுள்ள நடைமுறை. ஆனால், பொதியினைச் சுமந்து இழுக்கும் எருதுகளுக்குக் களைப்பு நீங்க ஓய்வு கொடுக்க மாற்று எருதுகளைக் கொண்டு செல்லும் பழக்கம் இன்று இல்லை.

ஆனால், பண்டைத் தமிழர் வாழ்வியலில் உயிரிரக்கம் மேம்பட்டிருந்தது. மயிலின் குளிர் நீக்கப் போர்வை ஈந்த உயிரிரக்கம் எங்கே? இன்று மந்தை மந்தையாக அடிகளத்திற்கு மாட்டை அழைத்துச் செல்லும் கொடுமை எங்கே? பற்றிப்படரக் கொழுகொம்பில்லாத முல்லைக் கொடிக்குத் தேர் ஈந்த இரக்கம் எங்கே? நாள்தோறும் காடுகளை வெட்டி அழித்து வரும் நமது புன்மதி எங்கே?

சங்க காலத்தில் எருது பூட்டிய வண்டியில் உப்பை ஏற்றிச் செல்கின்றனர். அந்த உப்பு வண்டியை இழுத்துச் செல்லும் காளைகளுக்கு ஓய்வு கொடுக்க வேறுகாளைகளையும் அழைத்துச் செல்கின்றனர் என்பதை,

“படலைக் கண்ணிப் பரேர் எறுழ்த் திணிதோள்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்