பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிசிராந்தையார் பெருவாழ்வு

69


செய்வோர் வேண்டும். அரசு நல்லது அல்லாதன செய்யாததாக அமையவேண்டும். ஊரில் சான்றோர் பலர் வாழ வேண்டும். பிசிராந்தையார் குறிப்பிடும் பஞ்சகல்பம் உடலுக்கும் பாதுகாப்புத் தருவது. உயிருக்கும் பாதுகாப்புத் தருவது. பிசிராந்தையார் காட்டியுள்ளது போன்ற வீடுகளை, நாட்டு அரசை, ஊரைக்காண முயற்சி செய்வோமாக!

“யாண்டுபல வாகநரையில வாகுதல்
யாங்காகிய ரென வினவுதி ராயின்
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே

(புறம்-19)