பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

173


விட்டார்கள். இதனை மார்க்ஸிஸ்டுகள் ஒத்துக்கொள் வதில்லை.


'இரைபோடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே-வீண்
அனுதாபம் கண்டு
மதிமோசம் போகாதே'


என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மிக அழகாகப் பாடுகிறார். சுரண்டும் வர்க்கத்தைச் சார்ந்தவன் பாட்டாளிக்கு என்றாவது ஒருநாள் வடை பாயசத்தோடு சோறு போடுவான். வேட்டி எடுத்துக் கொடுப்பான். இதைப் பார்த்து அந்த ஆளையும் நம்பக்கூடாது. அவனுடைய செயல் சுயநலத்தின் பாற்பட்டது.


"உள்ளம் என்பது ஆமை-அதில்
உண்மை என்பது ஊமை
சொல்வில் வருவது பாதி-நெஞ்சில்
துரங்கிக் கிடப்பது மீதி"


என்பது போன்ற அருமையான பல தத்துவப் பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் பாடியிருக்கிறார். இத்தகைய கவிஞர்கள் எண்ணற்றோர் இருக்கின்றனர். அத்தகைய கவிஞர்கள் நம்மோடு வாழ்வதாலேயே அவர்களையெல்லாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. பாரதிக்குப்பின் கவிதை இலக்கியம் வளர்ந்திருக்கிறது - வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது - வளர வேண்டும். பாரதிக்குப் பிறகு, இந்த நாட்டின் வளர்ச்சித் திட்டங்களையும், பிற முன்னேற்றங் களையும் பாடும் சுதந்திரக் கவிஞர்களும், சோஷலிஸக் கவிஞர்களும் தோன்றித்தான் இருக்கின்றனர்.


தம்மின் தம்மக்கள் அறிவுடைமை ஞாலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது"