பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

183



பாரதியின் தேசீயப் பாடல்கள்

எட்டையபுர மண்ணில் பிறந்து வளர்ந்து பாரத நாட்டிற்காக இந்த உலகச் சமுதாயத்துக்காக வாழ்ந்தவன் பாரதி. தாழ்வுற்று வறுமைமிஞ்சிப் பாழ்பட்டுக் கிடந்ததாம் ஒர் பாரத தேசந்தனைத் தன் பாட்டுத் திறத்தாலே பாவித்தவன் பாரதி. சுதந்திரப் போராட்ட இயக்கம் வளர - சமுதாயத்தின் விடுதலை உணர்ச்சி பீறிட்டு எழ - சமுதாயம் விடுதலை வேட்கை கொள்ள அவன் பாடிய பாடல்கள் - தேசியப் பாடல்கள் இன்றைய நிலையில் காலங்கடந் தவையா? என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். எனது இம் முன்னுரையை வெறும் செய்திகளை மட்டும் தரும் செய்திப் பத்திரிகை அளவில் அமைத்துச் சொல்கிறேன். அதுதான் தலைமைக்கு ஏற்றது. இரு கட்சிகளின் சார்பிலும் ஒத்த தகுதியுடையவர்கள் - திறமுடன் வாதிடக் கூடியவர்கள் அமைந்துள்ளனர்.

கட்சியாளர்களது கருத்துக்களை ஏற்றும் விளக்கியும், விடையிறுக்கப் பெறாத வினாக்களுக்கு ஏற்ற விடை தந்தும் பாரதியின் தேசியப் பாடல்கள் காலங்கடந்தவை என சிலர் விவாதிக்கிறார்கள்.

"சிந்துநதியின் மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத் -
தோணிகள் ஓட்டிவிளை யாடிவருவோம்"


என்ற பாடலில் குறிப்பிட்ட சிந்துநதி பாகிஸ்தானுக்குப் போய்விட்ட பிறகு இந்தப் பாடலுக்கு வேலை ஏது? இது காலங்கடந்த பாடல் அல்லவா என்கின்றனர்.

"இப்பாடல் நடைமுறைக்கு ஒவ்வாதது” என்ற அவர்கள் கருத்து, சரியானதுதானா? அன்றைய நிலையில் ஒன்றுபட்டு நில்லாது பிரிந்து போன பாகிஸ்தான் இப்போது