பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

205



"அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே
அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியரசாணை, பொழுதெல்லாம்
நினது பேரருளின்
 
நெறியிலே நாட்டம், கருமயோகத்தில் நிலைத்திடல்,
என்றிவை அருளாய்;
குறி குணம் ஏதும் இல்லாதாய் அனைத்தாய்க் குலவிடு
தனிப்பரம் பொருளே”

கலக்கமற்ற அறிவு, சபலமற்ற நெஞ்சு, அன்பு நிறைந்த உள்ளம், பொறிகளை அடக்கியாளும் ஆற்றல், இறைவன் திருவருள் நெறியினை மறவாத நோக்கம், இடையறாப் பணியில் ஈடுபாடு இவற்றையெல்லாம் ஆண்டவனே எனக்கு அருள்வாய் என்று வேண்டுகிறார் பாரதி. அதாவது இவையெல்லாம் ஒரு தலைவனுக்கு இன்றியமையாது வேண்டப்படுபவை என்று அறிவுறுத்துகிறார். நவயுலகத் தலைவர் பாரதி. இன்னும் ஒரு தலைவனுக்கு வேண்டிய ஒரு குணத்தையும் வெளிப்படுத்துகிறார். அது பகைமை உணர்ச்சியாகும். ஒரு தலைவன் எதைப் பகைக்க வேண்டும் என்பதை மாஜினியின் மூலமாக உணர்த்துகிறார்.

“தீயன புரிதல், முறைதவிர் உடைமை,
செம்மைதீர் அரசியல், அநீதி
ஆயவற்றுள் என்னெஞ்சு இயற்கையின்
எய்தும் அரும்பகை"

தீமையையும், அநியாய உடைமையையும், கொடுங்கோலையும் அநீதியையும் கண்டால் ஓர் உண்மைத் தலைவனை இயல்பாகவே அதன்மீது கோபங்கொண்டு அதை அழிக்கக் கொதித்து எழுவான் என்ற உண்மையையும் நன்கு வெளிப்படுத்துகிறார் பாரதி. மேலும் மனித