பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி தடத்தில் பாரதம்

227



பிராமண சபை, ரெட்டி சபை, வன்னியர் சபை என்று இருக்கும்வரை இந்த இழிவெல்லாம் தீராது. ஒரே கூட்டம் என்று பேசு! பூணூல் என்ன? கீணூல் என்ன? வீண் கதை" என்று பேசுகிறான்!

இன்றைய பாரதம் - தமிழ்நாடு எங்கு போய்க்கொண்டிருக்கிறது? பாரதியின் தடத்திலா? இல்லை. இல்லை! எங்குப் பார்த்தாலும் சாதிச் சங்கங்கள்! எனதருமை நாடே! என்று விழித்தெழுவாய்? -

மேலும் பாரதி எழுதுவதைக் கேளுங்கள்! "எல்லோரையும் சமமாக்கு! ஐரோப்பியர்களைப் போல, ஜப்பானியர்களைப் போல நடப்போம்! இது பாரதியின் ஆசை!”

பாரதி சாதிகளின் சங்கமத்தை மட்டும் விரும்பவில்லை! மதங்களின் சங்கமத்தையும் விரும்புகிறான்! 1906-லேயே நாடு முழுதும் சிவாஜி திருவிழாவும் அக்பர் திருவிழாவும் கொண்டாட வேண்டும் என்று எழுதியுள்ளான்.

பாரதி பாரத சமுதாயத்தில் சமத்துவம் நிலவ உழைத்தவன். சமைத்துவமே பாரதியின் கொள்கை கோட்பாடு! இந்திய நாட்டில் சாதி, வகுப்பு வேறுபாடுகளின்றிப் பணிகளில் அமர்த்த, சுக்கிர நீதி வழி வகுத்திருக்கிறது என்ற ஆதாரத்தை எடுத்துக் காட்டுகிறான்.

"எல்லா மனிதரும் சமம் என்ற கொள்கையை, சமூக வாழ்க்கையில் ஸ்தாபனம் செய்யும் வரை மானிடருக்குள்ளே பொறாமை, பகைமை, இகல், வஞ்சனை, போர் முதலியவை நீங்கா"- என்று பாரதி அறிவுறுத்துகிறான்.

பாரதி அறிவுறுத்துவதை நாம் ஏற்போமா? நடைமுறைப்படுத்துவோமா? சமத்துவ கொள்கைக்கு, கோட்பாட்டுக்குப் பாரத மாதாவே லோக குருவாக இருக்க வேண்டும் என்பது பாரதியின் ஆசை!

மனிதனை மனிதனாக மதிக்காமல் சமத்துவமாக நடத்தாமல் கொடுமைகள் பல இயற்றுவதைப் பல