பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி தடத்தில் பாரதம்

239



நிதி முட்டுப்பாடு இருப்பின் இடத்துக்கு இடம் தட்டுப்பாடுண்டாகும். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் முட்டுப்பாடுண்டாகும். செல்வம் உணவைப் போன்றது என்று கூறி ஒரு புதிய கொள்கையை உருவாக்கினான்.

அதாவது உண்ட உணவு செரிமானம் ஆவதைப் போல் ஈட்டிய செல்வமும் செலவழிக்கப் பெறுதல் வேண்டும். பணம் காத்த பூதமாகிவிடக் கூடாது.

நமது நாட்டில் செல்வர்கள் அதிகமில்லை. ஊருக்கு ஒருவர் இருந்தால் பெரிய காரியம். ஆயினும், அதைரியப்படக் கூடாது. பொருள் செய்யும் முயற்சியைத் தொடங்கிவிட்டால் வளரும். பெருகி வளரும். இது பாரதியின் நம்பிக்கை.

இந்த முயற்சியில் பாரதி, மாடாதிபதிகளையும் சம்பந்தப்படுத்துகிறான். மடாதிபதிகள் தங்களுடைய சிஷ்யர்களுக்கு ஆத்ம விசாரத்தில் பக்தி ஏற்படும்படி செய்ய வேண்டும்.

ஆத்ம விசாரத்திற்கு இரண்டு சத்ருக்கள் உண்டு. ஒன்று செல்வப் பெருக்கினால் உண்டாவது. அதாவது இந்திரிய போகம், சுகம். மற்றொன்று வறுமை. இவ்விரண்டுமே இல்லாமல் சமரச நிலைக்கு மக்கள் வந்தால் ஆத்ம ஞானத்தை ஏற்பார்கள்.

இந்நிலைக்கு ஜனங்களைக் கொண்டு வருவது மடாதிபதிகளின் கடமை. ஒவ்வொரு மடாதிபதியும் இக்கடமையை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

நமது நாட்டில் கொடிய தரித்திரத்தால் வருந்துகிறவர்கள் ஏராளம்! ஏழைகளுக்கு எவ்வாறு உதவி செய்வது? வறுமையிலிருந்தும் பயத்திலிருந்தும் எப்படி மீட்பது?

மடாதிபதிகள் அன்னதானம் செய்வதனால் வறுமை நீங்கிவிடாது. தரித்திரம் நிலையான ஏற்பாடுகளாலேயே அகலும். நிலையான ஏற்பாடு என்ன? ஒரே ஒரு வழிதான்