பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்யாமையால், பள்ளிச் சீரமைப்பில் பங்கு பெறுவோமாக பள்ளிச் சீரமைப்பு வேலைகள் பாங்குற நடை பெற்றுக் கொண்டிருக்கும் இன்றையத் தமிழகத்தில் பட்டி தொட்டிகளிலெல்லாம் பள்ளிகள்-ஆடு மாடு மேய்த்த சிறுவர்கள் அறிவகத்தில் அறிவு பெறுகிறார்கள்-இந்தச் சூழ்நிலையில் நாம் பாரதிக்கு-அறைகூவல் விடுக்கலாம். அது என்ன அறை கூவல்?

'தேடு கல்வி இலாத ஊரைத்திக் கொளுத்துவோம்' என்றாயே, இதோ எரிகின்ற இந்தத் தீப்பந்தத்தை வாங்கிக் கொள். தமிழகம் முழுவதையும் சுற்றி வா-தேடு-கல்வியில்லாத ஊரைத் தீக்கொளுத்து என்றே சொல்லுவோம்! கவிஞன் பாரதி தீ வைக்கட்டுமே பார்க்கலாம். அவன் தீ வைக்கத் தமிழகத்தில் ஊர் ஏது? இல்லை! இல்லை! எங்கும் கல்வி! எல்லோர்க்கும் கல்வி. இலவசக் கல்வி!