பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10


பாரதிக்குப்பின் கவிதை
வளர்ந்திருக்கிறதா?

இந்த நாட்டின் வரலாற்றில் பாரதியார் ஒரு மையப் புள்ளிபோல. அவர் அடிமையாகப் பிறந்தார்; அடிமையாகவே வாழ்ந்தார்; அடிமையாகவே இறந்தும் போனார். எனினும் தமது கவிதையால் இந்த நாட்டு மக்களிடையே சுதந்திர உணர்வைத் தட்டி எழுப்பினார்.

திருவள்ளுவரையும், கம்பரையும்விட பாரதி வளர்ந் திருக்கிறார் என்று கூறலாம், கருத்தோட்டமும் நடை முறையில் இருக்கும் பாரதியின் கவிதைகளும் பாரதியின் வளர்ச்சியைக் காட்டுகின்றன.

'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்'

என்றார் வள்ளுவப் பெருந்தகை. வள்ளுவர் வாழ்ந்த காலம் முடியாட்சிக்காலம்; அவர் முடியாட்சி மரபு முதலியவற்றை ஏற்றுக் கொண்டே பாடினார். எனவே தான் ‘இயற்றியான்' என்றார். பாரதியார் மக்களாட்சி யுணர்வு மிக்கோங்கியிருந்த காலத்தில் வாழ்ந்தவர். எனவே,

கு.VI.18.