பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பல சாதிகள் நினைவுக்கு வருகின்றன. மாம்பழச் சமுதாயத்தில் அமைந்த கிளிமூக்கு, மல்கோவா போன்றன வெல்லாம் பல்வேறு இனங்கள்-சாதிகள். அது போல பாரத சமுதாயத்தில் தமிழினம் ஒரு பிரிவு; சாதி, அதுபோலவே ஆந்திர இனம், கன்னட இனம், மலையாள இனம், வங்காள இனம் முதலிய பல உட்பிரிவுகளும் உள்ளன. இதனை நன்கு உணர்ந்துதான் பாரதி தமிழ் மக்களைக் குறிக்கும்போது தமிழ்ச்சாதி என்றும், தமிழர் உள்ளிட்ட பாரத மக்களைக் குறிக்கும்போது பாரத சமுதாயம் என்றும் பாடுகிறான்.

"விதியே தமிழ்ச்சாதியை எவ்வகை விதித்தாய்"


என்று விதியை நோக்கி வினவும்போது விதித்தாய் என்று தமிழ்ச்சாதியைக் குறித்தவன், பாரத மக்களை வாழ்த்தும் போது "வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே” என்று வாழ்த்திக் களிப்படைகின்றான். ஆகவே தமிழினத்தைத் தமிழ்ச்சாதி என்றும், பலவகை இனங்களையும் உள்ளடக்கிய பாரத மக்களைப் பாரத சமுதாயம் என்றும் வேறு வேறு பிரித்துக் காட்டுவதன் மூலம் சிறப்பாகப் பாரத தேசியத்தைச் சார்ந்து நிற்கின்றான்.

அடுத்து பாரத நாட்டைப் பாடும்போது பெற்ற உணர்ச்சி உணர்வைக் காட்டிலும் தமிழகத்தைப் பாடும் போது வெளியிடும் கவிதை உணர்ச்சி மிகச் சிறந்ததாக உள்ளது என்பது குறித்து, அதன் மூலம் தமிழ்த் தேசியம் என்று குறுகிய இடத்துள் பாரதியை அடைத்தார்கள்.

தன்மொழி, தன்னாடு இவற்றைப் பாடும்போதும் பேசும்போதும், எண்ணும்போதும் உணர்ச்சி மிகப் பாடுவதும், பேசுவதும் இயற்கையாயினும் பாரத நாட்டிற்குத் தந்துள்ள அளவுக்கு, சிறப்பைத் தமிழ்நாடு என்று பிரித்து எண்ணும்போது தமிழகத்திற்குப் பாரதி தரவில்லை.

பெயர், நாடு, நகர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்ற பத்தினையும் வைத்துச் சிறப்பித்துப்