பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்ற பாடலைக் காட்டி சுதந்திரதாகம் தீர்ந்த பிறகு அடிமைத்தளை நீங்கிய பிறகு இந்தப் பாட்டுக்குச் சிறப்புண்டா? இது காலங்கடந்த பாடல்தானே என்கின்றனர்.

அடிமையில் மோகம் தணிவது மட்டும் சுதந்திரமாகுமா? அந்நியர் ஆட்சியிலிருந்து விடுபடுவது மட்டும் சுதந்திரமாகுமா? பொருளியல் விடுதலை-இறப்பினின்று விடுதலை-பிறப்பிலிருந்து விடுதலை பெற வேண்டாவா? சுதந்திரம் என்பது அடிமைத்தளை நீக்கம் மட்டுமன்று. பொருளாதார விடுதலை இறப்பும் பிறப்பும் விடுதலை ஆகிய இவை அனைத்தையும் குறிப்பது; உள்ளடக்கியது. சுதந்திரம் ஒரு பெரிய வட்டம். அந்த வட்டத்திலுள்ள ஒரு பள்ளிதான் அடிமைத்தளை நீக்கம். அந்த ஒரு புள்ளி மட்டும் வட்ட மாகுமா? ஏனைப் புள்ளிகள் வேண்டாமா? செல்வமற்ற ஏழைக்கு-உழைத்தும் பயன் பெற முடியாது தவிக்கின்ற உழைப்பாளிகளுக்குப் பொருளாதார விடுதலை வேண்டாவா? இத்தகைய எல்லாவித சிக்கல்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுவதுதான் சுதந்திரம் என்ற கருத்தைப் புலப்படுத்துவதற்காகத்தான்-எல்லாவகை விடுதலையும் பெறுவதுதான் நான் வேண்டும். சுதந்திரம்' என்பதைக் குறிக்கத்தான் பாரதி அழகுற "ஆனந்த சுதந்திரம்" என்று பிறதோரிடத்தில் குறிப்பிடுகின்றான்.

ஆகவே இந்த நாட்டில் தூய அறிவும் ஆண்மையும் வளரும் வரையில் வலிமையுடையோர் வலிமையற்றோரைச் சுரண்டுவதை விடும் வரையில் சுரண்டப் படுபவர் இல்லையென்று முழங்கும் வரையில் பாரதி குறிப்பிடும் ஆனந்த சுதந்திரம்-முழுச் சுதந்திரம் பெற்றதாகக் கூற முடியுமா? அன்று நாம் பெற்றது சுதந்திரத்தில் வீசும் பங்கே ஆகும். எஞ்சிய முக்காலே மூன்று வீசும் பங்குச் சுதந்திரமும் பெறும் வகையில் இந்தப் பாடல் உயிர்ப்புடன் ஒலித்துக் கொண்டிருக்கும்.