பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் தேசியப் பாடல்கள்

287


என்று கூறுகிறது. எனவே சுதந்திரத்தை அனுபவிக்கும் நாம் அதைத் தருவதில் முக்கிய பங்கு வகித்த தேசியப் பாடல்களை மறக்காது போற்ற வேண்டும்.

கோகலே, வ.உ.சி, காந்தி, குருகோவிந்தர் போன்ற தேசிய இயக்கத் தலைவர்களைப் பற்றிய பாடல்கள் காலங் கடந்தவை அல்லவா? அவர்களது வரலாற்றை அறிய இன்று தெளிவான வரலாறு இல்லையா? பள்ளிக்கூட வரலாற்று ஆசிரியர் போதுமே. எனவே அவர்களைப் பற்றிய அப்பாடல்கள் காலங் கடந்தவைதான் என்கின்றனர்.

சிறை வென்று அடி உதை பட்டு இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் தந்த தலைவர்களைப் போற்றுவதுவணங்குவது-நினைப்பது நன்றியுணர்வின் பாற்பட்டதாகும். அவர்களை நினைக்க சமூக அறிவு நூல் போதும் என்கின்றனர். அது தவறு. பள்ளியில் சமூக நூல் பாடத்தில் அவர்களது. வரலாற்றைத்தான் படிக்கலாம். வினாவுக்கு விடை எழுதலாம்; மதிப்பெண்கள் பெறலாம். உள்ளத்தில் எழுச்சியை- உணர்வைப் பெற முடியுமா? நவீன ஆசிரியனும் சிறு கதை ஆசிரியனும்கூட அத்தகைய எழுச்சியைத் தரமுடியாது. ஒரு நல்ல கவிஞன்-மக்கள் கவிஞன்தான் அந்த எழுச்சியை ஊட்ட முடியும். எத்தனையோ பேர் சுதந்திரப் போராட்டக் காலத்தில் பக்கம் பக்கமாகச் சுதந்திரம் பற்றியும் தேச பக்தி பற்றியும் எழுதினர். இருந்தாலும் வங்கக் கவிஞனும் தமிழகம் தந்த சிங்கக் கவிஞனும் தந்த எழுச்சியைஊட்டிய உணர்வை ஊட்ட முடியவில்லை. இன்று படித்தாலும் உடல் புல்லரிக்கிறது-உள்ளம் துள்ளி எழுகிறது. இத்தகைய உணர்வை வெறும் வரலாற்று நூலோ வரலாற்று ஆசிரியனோ ஊட்ட முடியாது. அத்தகைய சிறந்த உணர்வைப் பெற அப்பாடல்கள்தான் வேண்டும்.

"ஆயிரம் உண்டிங்கு சாதி எனில்
அந்நியர் வந்து புகல் என்ன நீதி-”