பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தன்னலமின்றி என்றும் பிறர் நன்மைக்கென்றே அரும் பாடுபட்ட பற்றற்ற துறவியாய் வாழ்ந்தமையே. அவற்றை யெல்லாம் கண்ட பாரதியார் மனமார வாய் நிறைய வாழ்த்துகிறார். அந்தக் கவியைப் பார்ப்போம்.

"கல்வியைப்போல் அறிவும். அறிவினைப்போலக்
கருணையும் அக்கருணை போலப்
பல்விதஊக் கங்கள் செயுந் திறனும்
ஒரு நிகரின்றிப் படைத்த வீரன்
வில்விறலாற் போர் செய்தல் பயனிலதாம்
என அதனை வெறுத்தே உண்மைச்
சொல்விறலாற் போர் செய்வோன்;
பிறர்க்கன்றி தனக்குழையாத துறவி யாவோன்"

இதன் மூலம் தலைவர்களுக்குக் - கல்வியும், அறிவும், கருணையும், ஊக்கமும், தீர்க்காலோசனையும், தன்னலத் துறவும் எவ்வளவு அவசியம் என்பதைப் பாரதியார் உணர்த்துகிறார். தமிழ் இலக்கியங்களிலெல்லாம் மிகச் சிறந்த பண்பாடாகப் பேசப்படுகின்ற தன்னலத்துறவு அறிந்தின் புறத் தக்கது.

"தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முழலுந ருண்மையானே”

இவ்வுலகம் உண்டென்று கூறுகிறது புறநானூறு. "தனக் கென்று ஒன்றானும் - உள்ளான்; - பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்” என்பது குண்டலகேசி. “தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்” என்பது அகநானூறு. "பிறர்க்கற முயலும் பெரியோய்” என்பது மணிமேகலை. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டும் தலைவனுக்கு இந்தத் தன்னல மறுக்கும் பண்பு அமையாதிருக்குமானால் அவன் தலைமை நல்ல பயனை விளைவிக்காது. அவனது தலைமையும் மக்கள் சக்தியால் மாற்றப்பட்டுவிடும். எத்தனையோ பேரரசுகள்