பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் தேசியப் பாடல்கள்

289


அச்சிந்தனையை ஊட்டும்-வற்புறுத்தும் பாரதியின் பாடல் வேண்டாவா?

புவியிசை தருமமே அரசியலதனினும்
பிறஇய லதனினும் வெற்றிதரும் என
வேதம் சொன்னதை முற்றும்பேண
முற்பட்டு நின்றார் பாரத மக்கள்

என்று பாடுகின்றான்.

சுதந்திர காலத்தில் மக்களுடைய நோக்கத்தை எல்லாம் சுதந்திரம் பெறுவதில் செலுத்தச் செய்த நாம் சுதந்திரமே குறிக்கோளாக-இலட்சியமாக வைத்த நாம் சுதந்திரம் பெற்ற பிறகு அத்தகையதொரு சிறந்த இலட்சியத்தை மக்கள் மன்றத்தின் முன் வைக்கவில்லை. மறந்து விட்டோம். இன்று நாட்டு நலத் திட்டங்கள் பல தீட்டிச் செயல்படுத்தும் நோக்குடன் முன்னேறும் நாம் அவற்றை விடச் சிறந்த-சாதி வேறுபாடு இல்லை-எல்லாரும் ஓர் குலம்-எல்லாரும் ஓர் நிலை-எல்லோரும் இந்தியப் பெரு நாட்டின் குடிமக்கள் என்ற பெரியதொரு இலட்சியத்தை மக்கள் மன்றத்தில் நிறுத்தி மக்களை எழுச்சியுறச் செய்ய மறந்துவிட்டோம். சமதர்ம சமுதாய அமைப்பை வலியுறுத்தி இலட்சியமாக்க மறந்தோம். மக்களது இலட்சியமாக ஆக்கவில்லை.

அரசியல் ஆட்சி, போகும் வரும், ஆனால் நீதி அறம் என்றும் நிலையாக நிற்பது-மாறாதது-அழியாதது. ஆயினும் இன்று மக்களிடம் அரசியலுக்கு இருக்கும் மோகம் எல்லா மனிதருக்கும் சோறு போட வேண்டும் என்பதில் இல்லை. எல்லார் வயிற்றையும் நிரப்ப வேண்டும் என்பது போன்ற நீதியை-அறத்தை வற்புறுத்தும் பாரதியின் பாடல் வேண்டாவா?


"கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும்-ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்”