பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




14
பாரதி அமைத்த பாலம்


பழமையிலுள்ள உயிர்ச் சத்தான கருத்துகளைவாழ்க்கைக்கு உறுதி பயக்கும் கருத்துகளை-நலன் விளைவிக்கும் கருத்துகளை பாரதி மறுக்கவில்லை-ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை. தந்தை தோண்டிய கிணறு நல்ல கிணறாக இருந்தால் புதிய கிணறு தேவையில்லை என்பது பாரதியாரின் கருத்து.

மனிதன் நாளுக்குநாள் பண்பாட்டால்-நாகரிகத்தால் வளர்கிறான்-வளரவேண்டும். அதுதான் நியதி முறை. வளரவேண்டிய மனிதன் உழைக்கவில்லையானால், சிந்திக்க வில்லையானால், அவனுடைய உடலும் வளராது-உள்ளமும் வளராது. நீண்ட நெடுநாள்களுக்குப் புகழோடு வாழவும் முடியாது. மனிதன் வளர்கிறான் என்றால் அவன் சிந்திக்கிறான் என்று பொருள்.

தாயைவிடப் பிள்ளை சிறந்ததாக இருப்பது தாய்க்குப் பெருமை-தந்தையின் சிந்தனையைவிட மகனின் சிந்தனை சிறந்ததாக இருப்பது தந்தைக்குப் பெருமை. இந்த வளர்ச்சியில் தவறேதுமில்லை. இதைத்தான்,