பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி காட்டும் வழி

303


'குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்க் குலவிடு
தனிப்பரம் பொருளே’

கலக்கமற்ற அறிவு, சபலமற்ற நெஞ்சு, அன்பு நிறைந்த உள்ளம், பொறிகளை அடக்கியாளும் ஆற்றல், இறைவன் திருவருள் நெறியினை மறவாத நோக்கம். இடையறாப் பணியில் ஈடுபாடு இவற்றையெல்லாம் ஆண்டவனே எனக்கு அருள்வாய் என்று வேண்டுகிறார் பாரதி. அதாவது இவையெல்லாம் ஒரு தலைவனுக்கு இன்றியமையாது வேண்டப்படுபவை என்று அறிறுறுத்துகிறார் நவயுலகத் தலைவர் பாரதி. இன்னும் ஒரு தலைவனுக்கு வேண்டிய குணத்தையும் வெளிப்படுத்துகிறார். அது பகைமை உணர்ச்சியாகும். ஒரு தலைவன் எதைப் பகைக்க வேண்டும் என்பதை மாஜினியின் மூலமாக உணர்த்துகிறார்.


தீயன புரிதல், முறைதவிர் உடைமை,
செம்மைதீர் அரசியல், அநீதி
ஆயவற்று என்னெஞ்சு இயற்கையின்
எய்தும் அரும்பகை”

தீமையையும், அநியாய உடைமையையும், கொடுங்கோலையும் அநீதியையும் கண்டால் ஓர் உண்மைத் தலைவன் இயல்பாகவே அதன்மீது கோபங்கொண்டு அதை அழிக்கக் கொதித்து எழுவான் என்ற உண்மையையும் நன்கு வெளிப்படுத்துகிறார் பாரதி. மேலும் மனித உள்ளத்திலே பெரும்பாலாகத் தோய்ந்து கிடக்கும் சில தீமைகள் ஒழிய வேண்டும் என்றும் வேண்டுகிறார்.


'மதிமூடும் பொய்மையிருளெல்லாம்-எனை
முற்றும் விட்டகல வேண்டும்:
ஐயம்தீர்ந்து விடல் வேண்டும். புலை
அச்சம் போயொழிதல் வேண்டும்"