பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி காட்டும் வழி

305



"தருமத்தின் வாழ்வதனைச் சூதுகவவும் தருமம்
மறுபடி வெல்லும்" எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழிதேடி.விதி
இந்தச் செய்கை செய்தான்
கருமத்தை மேன்மேலுங் காண்போம் இன்று
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம்மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்
தனுவுண்டு காண்டீபம் அதன் பெயர்"


என்கின்றான். தரும நம்பிக்கையும், அத்தோடு தன்னம்பிக்கையும் தலைவர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை வையத் தலைவன் பாரதி நன்றாக எடுத்துக் காட்டுகிறார். இல்லையா? காந்திய உணர்விலே ஊறிய பாரதி தலைவர்களுக்குச்சொல்லும், செயலும் ஒன்றாக இருக்க வேண்டும்; கொள்கை வேறு வாழ்க்கை வேறு என்று இருக்கக்கூடாது; அப்படி மாறுபட்டிருப்பவர்கள் சமுதாயத் துரோகிகள் என்று வசனத்தில் எழுதுகிறார். நிலையான வெற்றி வேண்டில் அறமான செயல் வேண்டும் என்பது பாரதி காட்டும் வழி. "ஜெயம் நிலையாக செய்வதற்கு அறமே சிறந்ததோர் மார்க்கம்” என்று மாஜினியின் மூலம் நமக்கு எடுத்து விளக்குகிறார். மேலும் மாஜினியின் மூலம் பூரணத்தியாகத்திற்குத் தயாராக இருப்பவனே தலைவனா வான் என்பதை.


"என்னுடன் ஒத்த தருமத்தை யேற்றார்
இயைந்த இவ்வாலிபர் சபைக்கே
தன்னுடல் பொருளும், ஆவியுமெல்லாம்
தத்தமாய் வழங்கினேன்"

என்று நமக்கெல்லாம் அறிவுறத்துகிறார். ஒரு தலைவன் சர்வாதிகார மனப்பான்மையின்றித் தன்னுடன் உழைப்போர் மணமறிந்து ஒற்றுமைப்பட்டு தான் என்றும் ஊழியனே என்ற பணியுணர்ச்சியோடு பணிசெய்ய வேண்டும். அயர்ச்சி