பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வருத்தும் கொடிய துன்பம் வேலையில்லாத் திண்டாட்டம் என்பதைப் பாவேந்தனும்

"தொழில் வேண்டு வார்க்குத் தொழிலில்லை”

(குடும்ப விளக்கு - பக். 61)

என்று வருந்திப் பாடுகின்றான். நாடு நலமுற, வளர, வாழத் தொழில்களை வளர்க்கவும், வேலை வாய்ப்புக்களை வழங்கவும் முதலீடு செய்ய வேண்டும் என்பது பாவேந்தனின் அறிவுரை. இன்று இளந்தலைமுறையினர் வேலை செய்து வளர வாய்ப்புக்கள் இல்லை! ஊர்தோறும் பல நூற்றுக் கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெறவில்லை. உலக நாடுகளிலேயே வேலைவாய்ப்புக் குறைவான நாடு நமது நாடுதான்! ஆதலால், இந்த நூற்றாண்டில் செய்யக் கூடிய தலைச்சிறந்த அறம், தொழிற் சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பு வழங்குவதேயாம். பின்னை உள்ள அறங்கள் இரண்டாம் நிலையினவே என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

எம்மட்டில் உண்டோ அம்மட்டில் உண்டு

தமிழினத்தின் பிறவிக்குணம், ஒற்றுமையைப் பேணா திருத்தல். நமது பாவேந்தன் தமிழர் தம்முள் ஒற்றுமை பேணவேண்டும் என்று வலியுறுத்துகின்றான். ஏன் நம்முள் ஒற்றுமை இடம் பெறவில்லை? நாம் அனைவரும் ஒன்றென்று எண்ணும் உணர்வு தோன்றி வளராமல், அயல் வழக்கின் வழி வந்த சாதிகள் பிரிவினைப்படுத்தி ஒற்றுமையைக் குலைத்த கொடிய செய்தியை நினைத்தாலும் குருதி கொதிக்கிறது. பாவேந்தன்,

"....எல்லாரும்
ஒன்றென்னும் எண்ணம் உயரவில்லை.ஒற்றுமைதான்
நன்றென்னும் எண்ணம் நடப்பதுவோ?

(குடும்ப விளக்கு - பக். 6)