பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எங்களால் நடந்த தில்லை
சின்னதோர் நன்றி செய்தார்
திறம்மறந் தறியோம்"

(குடும்ப விளக்கு - பக். 185)

என்னும் அடிகளை ஒர்க.


துன்பத்தின் காரணங்களை மாற்றுக

பாவேந்தன் வெளிப்படைக் கவிதைகளையே அதிகமாகப் பாடியவன். ஆயினும், கற்பனை வளத்தில் பாவேந்தனுக்கு நிறைய ஆற்றல் உண்டு.

மாட்டின் மீது ஈக்கள் மொய்க்கின்றன. மாடு தனது வாலைச் சுழற்றி ஈக்களை விரட்டுகிறது. அதனால் ஈக்களால் விளையும் துன்பம் ஒய்ந்துவிடுமா என்ன? ஈக்கள் புழுக்கும் இடத்தைத் தூய்மை செய்தால்தானே துன்பம் தொலையும். இஃது ஒர் எளிய கற்பனை! இந்தக் கற்பனை மூலம் கவிஞன் நமக்கு உணர்த்துவது, "துன்பங்களுக்கு மாற்றுத் தேடாதீர்! துன்பத்தின் காரணங்களையே மாற்ற முனைவீர்! அதுவே வாழும் முறைமை” என்பதாகும்.

நகைச்சுவை

பாவேந்தனின் 'குடும்ப விளக்கு' காப்பியம், காப்பியச் சுவைகள் நிறைந்து விளங்குவது. காப்பியத்திற்கு இன்றியமை யாதது நகைச்சுவை. நாத்தியார் வீட்டுக்கு வண்டிப் பயணம் போய்வந்த மாமன் மாமிக்கு, வண்டிப் பயணம் அமைந்த நலம் பற்றி மருமகள் மாமியை கேட்கிறாள்.

"இவையெல்லாம் வண்டிக் குள்ளே
இருந்தன என்றால், அந்த
அவைக்களம் தனிலே நீவிர்
எங்குத்தான் அமர்ந்திருந்தீர்?
சுவைப்புளி அடைத்து வைத்த
தோண்டியின் உட்புறத்தில்