398
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
எழுதவல்ல பேசவல்ல கல்லூரிக்
கணக்காயர் எவரும் நாட்டின்
முழுநலத்தில் பொறுப்புடனும் முன்னேற்றக்
கருத்துடனும் உழைப்பா ராயின்
அழுதிருக்கும் தமிழன்னை சிரித்தெழுவாள்;
அவள்மக்கள் அடிமை தீர்வார்!
இந்த நிலை என்று உருவாகும்? நினைமின்! செய்ம்மின்!
தமிழ்த் தெருவில் தமிழ் வேண்டும்
தமிழ் நாட்டின் தெருக்களில், கடை வீதிகளில் தமிழ்தான் இல்லை! கடைகளுக்குத் தமிழில் பெயர் வைத்தால் என்ன? என்று பாவேந்தன் தணிப்பரிய துன்பத்தில் உழன்று பாடிய கவிதை இதோ!
உணவுதரு விடுதிதனைக் "கிள"ப் பெனவேண்
டும்போலும்! உயர்ந்த பட்டுத்
துணிக்கடைக்குச் "சில்குஷாப்” எனும் பலகை
தொங்குவதால் சிறப்புப் போலும்!
மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை?
தோப்பில் நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின்
தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை!
இந்த நிலை என்று மாறும்? தமிழையே கருவியாகக் கொண்டு அரசு, இதற்குச் சட்டங்கள் இயற்றக்கூடாதா? இனிமேலாவது செய்வார்களா? பொதுமக்களாகிய நமக்காவது சுரணை வருமா?