சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்
443
வேளையில் வயிறு உணவு கேட்டுத் தொந்தரவு செய்கிறதாம்! வயிற்றுக்கு உணவு தேடுவதா என் தொழில்? குலோத்துங்கன் கவிதையைக் கேளுங்கள்!
"கால மோவிரை கின்ற தோர்சிறு
கணமும் மீளுமோ? ஏழை இப்பெரும்
ஞாலம் மீதுறை நாட்க ளோ, சில!
நான் தெளிந்திட வேண்டும் உண்மைகள்
சால வுள்ளன!ஒய்வ றிந்திலன்
சலிப்பி றந்துழைக் கின்ற வேளையில்
ஒலம் இட்டெனை உணவு தேடென
உரற்று வாய்வயி றே!இஃ தென்தொழில்?”
காலத்தைக் காத்துப் பயன்படுத்துவோம்! வாரீர்! காலத்தை முறையாகப் பயன்படுத்துவோர் வாழும்
மறுமலர்ச்சி என்பது புதியன வேட்டல்! பழைய தலைமுறையைச் சேர்ந்தவன் குறிசொல்லும் கோணங்கி! பாரதி மறுமலர்ச்சிக் கவிதையில் முடிசூடா மன்னன்! ஏன் அவன் தன் வட்டங்களையும் கூடத் தாக்கியவன்! புரட்சிச் சிந்தனையாளன்! பாரதி, புதிய கோணங்கியாக நின்று, நமது நாட்டின் மறுமலர்ச்சிக்குக் கட்டியம் கூறி வரவேற்கின்றான்!
மறுமலர்ச்சிக்கு முதல் தேவை படிப்பு. அதனால், "படிப்பு வளருது! பாவம் தொலையுது!" என்று பாடினான் பாரதி. ஆனால், கடந்தகால வரலாற்றில் படித்தவர்களில் ஒரு சிலராலேயே மறுமலர்ச்சி இயக்கம் பயன்பெற்றது.
பலர் மானிடத்தின் வட்டத்தைச் சுருக்கிவிட்டனர்! தந்திரமாகச் சாதி, ஊழ் முதலியனவற்றைப் படைத்து, வளரும் சமுதாயத்திற்குத் தீங்கிழைத்து விட்டனர். இவர்கள் மெத்தப்படித்தவர்கள்; சாத்திரங்கள் செய்து சதி