பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்

453


இன்று, நமது நாட்டை வருத்துவதெல்லாம் பண மதிப்பீட்டுச் சமுதாயமேயாகும். எங்குப் பார்த்தாலும் பணத்திற்கே மதிப்பு! கல்விக் கோயிலா? அங்கும் பணம் தான்! கடவுள் சந்நிதியா? ஐயய்யோ, சொல்லவே வேண்டாம்! அங்கும் பணத்திற்கே கொள்ளை மதிப்பீடு!

கணவன் மனைவி உறவா? அங்கும் ஊடே பணமே விளையாடுகிறது! இந்தப் பண மதிப்பீட்டுச் சமுதாயம் அன்பைக் கெடுக்கிறது; உறவைக் கெடுக்கிறது; வாணிகப் புத்தியை வளர்க்கிறது; இலாப வேட்டையை நடத்துகிறது. இன்று நாட்டுடைமை யாக்கப்பட்டுள்ள கையூட்டு, பண மதிப்பீட்டுச் சமுதாயத்தின் விளைவேயாகும்.

"எப்பாடு பட்டேனும் பணத்தைச் சம்பாதித்துவிடு! அதற்கு அப்புறம் நீ, நீயேதான்” என்கிறது இந்தப் பண மதிப்பீட்டு சமுதாயம்! இப்படிப்பட்ட சமுதாய வளர்ச்சியில் மனித நேயம் மறக்கப்பட்டு வருகிறது.

பணம் இல்லையானால் இன்று சராசரி வாழ்க்கை கூட வாழ இயலாது. பணம் படைத்தவர்கள் வாழும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைப் பார்த்துப் பலர், அத்தகைய வாழ்க்கையை விரும்புகின்றனர். அவர்களைப் போலவே, தாமும் வாழ ஆசைப்படுகின்றனர்.

அதன் காரணமாக ஜோதிடரை நாடுகின்றனர்; குறி சொல்லுபவனை நாடுகின்றனர்; பரிசுச் சீட்டை நாடு கின்றனர். ஆயினும் முன்னேற்றமில்லை! நேரத்தைக் கழித்ததே மிச்சம்; இதனால், இனம் தெரியாத விலங்கியல் வாழ்க்கை கால்கொள்கிறது. இதோ, முற்போக்குச் சிந்தனையாளர் வல்லிக்கண்ணனின் படைப்பில் ஒரு பகுதி:

"பணமே முக்கியம். பணத்துக்கே மதிப்பு அதிகம் என்ற நிலை ஏற்பட்டுவிட்ட சமுதாய அமைப்பில், ஆசையும் அரிப்பும் பெற்றுள்ள அனைவரும் பணம் தேடுவதிலும், மேலும் மேலும் தேடிக் குவிப்பதிலும் தீவிர வேகம் காட்டுவது இயல்பாகி விட்டது.