பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

468

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டும். கன்னட எழுத்தாளர் பேந்தரே விவேகமில்லாத மக்களாட்சி பயனற்றது என்று கூறுகிறார்.

வரி கொடுப்போரது வளர்ச்சிக்கும் நலனுக்கும் உத்தர வாதம் தராது, அவர்களை நெறியல்லா நெறிகளில் திருப்திப்படுத்துவதும் தாஜா செய்வதும் மக்களாட்சியன்று, என்றும் பேந்தரே கூறுகிறார். கேளுங்கள்!

விவேகம் இல்லாத ஜனநாயகத்தைச் சாடுகிறார். முனிசிபல் கவுன்சிலர்களுக்காக அவர் தயாரித்துள்ள விதிகள் வருமாறு:

"தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இரண்டு கவுன்சிலர்கள் ஒரே பேட்டையில் ஒரே தெருவில் இருக்கக் கூடாது. அப்போதுதான் எத்தனை கவுன்சிலர்கள் இருக்கிறார்களோ அத்தனை தெருக்களாவது நமது நகரில் சுத்தமாக இருக்கும் என்ற உத்தரவாதமாவது வரி கொடுப்போருக்கு இருக்கும்."

(- இன்றைய இந்திய இலக்கியம் பக். 126)

நம்முடைய நாட்டு மக்களுக்கு வறுமையும் ஏழ்மையும், இழிவும் அவமானமும் இயல்பாகப் போய்விட்டன. அவர்கள் இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்வ தில்லை. உண்மையாகச் சொன்னால் இப்போது நம்மிலே பலருக்குச் சூடும் இல்லை; சுரணையும் இல்லை.

நம்முடைய அவமானங்களையும் இழிவுகளையும் தாங்கியே ஆகவேண்டும் என்று மருட்டுகின்ற மதத்தலைவர் விதித்த தலைவிதித் தத்துவத்தினின்றும் இன்னும் நாம் விடுதலை பெற்ற பாடில்லை. இன்னமும் நம்முடைய மூளையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது பழைய பஞ்சாங்கம்தான். .

கொடுமைகளை எதிர்க்கும் துணிவு நமக்கு என்று வரும்? நாம் இந்தத் தலைமுறையில் புரட்சியாளர்களாக ஆகமுடியுமா? ஒருகாலும் முடியாது. ஏனென்றால் நாம் புரட்சி என்ற சொல்லையே பொருள் புரியாமல் கொச்சைப்