பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று, மொழி பெயர்த்து அருளியுள்ள பெற்றியினை நன்றிக் கடப்பாட்டுடன் எண்ணுவோம்! ஏற்று வாழ்வோம்!

சாதிப் பற்றுடையார், “இங்கு சண்டாளன் என்பது உயர்குடியிற் பிறந்து இழிநிலை எய்தினோரையே குறிக்கும். பிறவிச் சண்டாளர் எனப்படும் தாழ்த்தப்பட்டவர்களை - ஆதிதிராவிடர்களைக் குறிக்காது” என்பர்.

ஆயினும், இது சாதியைக் காப்பாற்றும் புன்மைக் குணமே; புல்லறிவாண்மையேயாம். நமது மெய்மை நெறியின் கொள்கை முற்றாகச் சாதி வேற்றுமைகளை நீக்குவது; தீண்டாமையை அறவே அகற்றுவதேயாகும். என்று, நமது சமுதாயத்தில் தீண்டாமை அறவே அகன்று, ஒரு குல அமைப்பு தோன்றுகிறதோ அன்றே நமது சமுதாயம் வளரும்; வரலாற்றுப் போக்கில் பாதுகாப்புடன் இருக்கும்; நாடு வளரும்; நமது சமயம் வளரும்.

அந்த நாளும் வருமோ? இன்று, நாடு போகும் நிலைமையை நோக்கும்போது சாதி வேற்றுமைகள் அகலும், தீண்டாமை அறவே அகலும் என்ற நம்பிக்கை உண்டாகவில்லை.

ஏன்? நமது நாட்டு அரசியல் தலைவர்கள் நோய்க்கே மருத்துவம் செய்கின்றனர். நோயின் காரணத்தை நாடி மருத்துவம் செய்வாரைக் காணோம். அது மட்டுமல்ல, எது செய்தாலும் அதற்குக் கைமாறாகப் பாராட்டு; புகழ்; வாக்குகள் என்ற பிச்சைக்காரப் புத்தி வளர்கிறது.

பழைய காலத்தில் சாதி முறைகள் இருந்தன; தீண்டாமை இருந்தது; ஆனால் அன்று அவை நெகிழ்ந்து கொடுத்தன. இன்றுள்ள சமுதாய முன்னேற்றம் நடைமுறைகள், ஒதுக்கீட்டுக் கொள்கைகள் சாதிமுறைகளை இறுக்கமாக்கிக் கொண்டு வருகின்றன.

தீண்டாமை விலக்குப் பணி, ‘குடியிருப்பு’ (காலனி) கட்டுவதன்று; ஊரில் ஊர் நடுவில் வீடு கட்டுவது;