பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று திருக்கோயில் பணி செய்யக் கூவி அழைக்கிறார்! அப்பரடிகள், வாழ்ந்த காலத்தில் இந்தப் பணிகள் எந்த அளவுக்கு அவசியமாக இருந்தது என்பது தெரியவில்லை. ஆனால், இன்று இந்தப் பணிகளை அவாவி நிற்கும் திருக்கோயில்கள் எண்ணற்றவை. நமது திருக்கோயில்களை நாம் பேணிக்காக்க வேண்டும். அது நமது கடமை.

எல்லை கடந்த அருளாளர்

அப்பரடிகள் வேறுபாடுகளைக் கடந்த நெஞ்சினர். உலகந் தழிஇய உணர்வினர்; நாடு, மொழி, சமய எல்லைகள் கடந்த அருளாளர். ஒரோவழி சமணர்கள், பெளத்தர்களைக் கடிந்த பகுதிகள் சில உண்டு. இவை மதத்தின் பெயரால் தவறு செய்தவர்களைக் கண்டிக்கும் நோக்கத்திலேயன்றி வேறு அல்ல. அதே போழ்து வேறுபாடுகளையும் தனித் தன்மைகளையும் அங்கீகரிக்கும் பேருள்ளம் அப்பரடிகளுடையது.

வடமொழியும் தென்தமிழும் ஆனான் கண்டாய்,
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

என்ற அடிகள் கவனித்துப் படித்து இன்புறத் தக்கன. இறைவனை “எல்லா உலகமும் ஆனாய்” என்ற பாடல் உலக ஒருமைப்பாட்டினை வற்புறுத்தும் பாடல்.

இன்றைய தமிழகத்திற்கு அப்பரடிகளே சிறந்த வழிகாட்டி அப்பரடிகள் காட்டிய அருள்நெறியே நமது நெறி.

உலகப் பொது நெறி. வளர்க அருள்நெறி!