பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


 நன்றுடையார் போல் காட்டித் தீமை செய்தல். இது வஞ்சனை; தந்திரம்.

அடுத்து, உலக வழக்கில் பெருவழக்காகப் பயிலும் பழமொழி,

'பேயோடாயினும் பிரிவு தீயது' என்ற பழமொழி.

பேயோ டேனும் பிரிவொன் றின்னா
தென்பர் பிறரெல்லாம்
காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ
கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும்
உமக்காட் பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திருவா ருரீர்
வாழ்ந்து போதீரே!

(7.95.9)

ஆம்! பேயோடு கூடப் பிரிவு கூடாது. கூடிவிட்டால் பேய் உடனிருந்தபோது செய்த தீங்கைவிட அளவில் கூடுதலான தீமையைச் செய்யும்! ஆதலால், போயோடு ஆயினும் பழகிய பின் பிரியக்கூடாது. பெருந்தலைவர் காமராசர் இந்தப் பழமொழியை அடிக்கடி கூறுவார் என்பது நினைவு கூரத்தக்கது.

சுந்தரர், திருத்துறையில் எழுந்தருளியுள்ள இறைவனை நோக்கி “வேண்டினேன் தவநெறி" என்று வேண்டுகின்றார். சுந்தரர் நெறி எது? சுந்தரர் பரவையாருடன் கூடி வாழ்ந்ததைச் சேக்கிழார் யோகம் பயின்றார் என்று கூறி, சுந்தரரின் மனை வாழ்க்கையைச் சிறப்பிக்கின்றார்.

தென்னாவ லூர்மன்னன் தேவர்பிரான் திருவருளால்
மின்னாருங் கொடிமருங்குல் பரவையெனும் மெல்வியல்தன்
பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்.

(தடுத்தாட்கொண்ட புராணம் 182)