இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உய்யும் நெறி
93
வாழும் நெறி. மனித உயிர்க்கு மாண்பினைச் சேர்க்கும் நெறி. அச்சத்தினின்று அகல அரனிடத்து ஒடுங்கிய அம்மையே போலச் சித்தத்தைச் சிவன்பாலே வைத்து ஒன்றுதலே உய்யும் நெறி.
சங்கு செம்பவ ளத்திரண் முத்தவை தாங்கொடு
பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்
துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே!
- திருஞானசம்பந்தர்