பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



‘கோவுடனே கூடியதோர் குருட்டாவும் ஊர்புகுதும்’ என்று உமாபதி சிவமும் குறிப்பிடுகின்றார்.

மேலும், கண்ணுள்ள பசுக்கள் நன்றாக மேய்ந்து வந்திருப்பதால் அதனிடத்தே பால் வளம் இருக்கும். அது, கன்றை நோக்கிக் கனிந்தழைத்து ஊட்டமுடியும். குருட்டுப் பசுவோ, வழக்கத்தினால் மேய்ச்சல் தரைக்குப் போயிற்று. எனினும் கண் குருடானமையினால் நல்ல வண்ணம் மேய்ந்திருக்க முடியாது-பால்வளம் இருக்காது. அது எப்படி கன்றுக்கு அன்பு காட்டமுடியும்? அதுபோல மெய்யடியார்கள் ஞானப் பசியுடையராயிருத்தலால் ஞான நூல்களைக் கற்றும் கேட்டும் தனக்குவமை இல்லாத தலைவன்மீது முருகிய அன்பை வளர்க்கிறார்கள். இறைவனைக் கண்ணப்பர் முழுக்காட்டியதுபோல அன்பினால் முழுக்காட்டிப் பரவசப்படுத்த முடியும். பொய்யடியார்க்கு ஞானப்பசி இல்லை. இறைவன் மீது தணியாத காதலும் இல்லை, ஞான நூல்களைக் கற்கவும் கேட்கவும் வாய்ப்பில்லை. பழக்கத்தினாலேயே பெயர் சொல்லுவார்கள். எனினும் மெய்யுணர்வில்லை. அவர்கள் எங்ஙனம் இறைவனை மகிழ்வித்துத் திருவருளைப் பெற முடியும்?

ஆதலால் நாடகத்தால் அடியார் போல் நடிப்பவர்கள் உண்மையான திருவருள் இன்பத்தைப் பெறமுடியாது. உண்மைத் திருவருள் இன்பத்தைப் பெற வேண்டுமென்றால், இறைவனிடத்தில் உண்மையான அன்புகொள்ள வேண்டும். அத்தகு அன்பினை உளத்தில் தோற்றுவித்து அருள் வழங்கி ஆட்கொள்ளும் வண்ணம் மாணிக்கவாசகர் பிரார்த்திக்கிறார். பாடலைப் பாருங்கள்:

தாராயுனயா யடியேற்கு
உன்தாள் இணையன்பு
பேரா வுலகம் புக்காரடியார்
புறமே போந்தேன் யான்