இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
274
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
அப்படி ஆட்கொள்ளும் போது திருவருளை உணர்ந்த மெய்யறிவாளர்கள்—அன்பர்கள் திருவருள் நலம் பெறுகிறார்கள், பொய்யர்கள் பொய்யாகி உலகத்திலேயே உழல்வார்கள். இப்படி என்னைப் பொய்யுலகில் விட்டுவிட்டுப் போகலாமா? என்று இறைவனை இரந்து கேட்கிறார் மாணிக்கவாசகர். அவருக்காகவா? நமக்காகத்தான்! பாடல் படித்து ஓதிப்பயன் பெறுதற்குரியது.