பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழுதால் பெறலாம்

277



நாள்தோறும் உடலில் சேரும் அழுக்கை, குளித்து நீக்கித் தூய்மைப்படுத்திக் கொள்வது போலவும் - நாள் தோறும் உடையில் சேரும் அழுக்கை, துவைத்து நீக்கித் தூய்மைப் படுத்திக் கொள்வது போலவும் நாள்தோறும் உள்ளத்தெழும் பொய்மையை இறைவனை நோக்கி அழுவதின் மூலம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அழுகை இதயத்தின் ஆழத்திலிருந்து வர வேண்டும், அழுகை பிழைதிருத்தும்; பிழையிலிருந்து தவிர்க்கும்; பிறவியைத் தடுக்கும்; ஆரா இன்பத்தை அளிக்கும்.