இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புலன்களும்-பொறிகளும்
283
இறைவனே ஆட்கொண்டான் மாணிக்கவாசகரை. அவன் உடையான் அல்லவா! “உடையாய் என்னைக் கண்டு கொள்ளே” என்று மாணிக்கவாசகரே குறிப்பிடுகின்றார். சிந்தனையே செயலுக்கு அடிப்படை. சிந்தனையின் வழியே செயல் மலரும். முதலில் சிந்தனையை உரிமையாக்கினார். அவ்வழி காட்சியும் - வாழ்த்தும் - வணக்கமும் உரிமையாயின. சிந்தனை - காட்சி - வாழ்த்து - வணக்கம் எல்லாம் திருவருள் வழிபட்ட அன்பு புலன்களும் திருவருளை அனுபவித்தின்புற்றன. ஆதலால் இறைவழி பாட்டில் பொறிகளும்-புலன்களும் ஒருங்கியைந்து செய்யக் கூடிய சடங்குகள் இன்றியமையாதனவேயாம்.