இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருவெம்பாவை
சக்தியை வியந்தது
திருச்சிற்றம்பலம்ஆதியு மந்தமு மில்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே! வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தா ளென்னே! யென்னே!
ஈதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.
1
அறிவால் சிவமேயாய மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகம் தேன்; மன்னுயிர்க்கு மருந்து, திருவாசகம் ஓதுதல் தீவினைக்கு மருந்து. சிவஞானத்தை நல்கும்