மாணிக்கவாசகர்
25
ஈண்டு கனகம் இசையம் பெறா அது
ஆண்டான் எங்கோன்! “...”
என்ற வரிகளாலும்,
இரும்பு தரு மனத் தேனை ஈர்த்தீர்த் தென் என்புருக்கிக்
கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை உன் கழலிணைகள்
ஒருங்கு தீரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவா றன்றே உன் பேரருளே!
என்ற பாடலாலும் அறியலாம். மதுரைப் பெருநகரில் பெருமான் குதிரைச் சேவகனாக வந்தருளியதை,
“மதுரைப் பெரு நன் மாநக ரிருந்து
குதிரைச் சேவக னாகிய கொள்கையும்”
என்ற வரிகளாலும், இறைவன் பிட்டுக்கு மண்சுமந்த நிகழ்ச்சியை,
பிட்டு நேர்பட மண் சுமந்த
பெருந்து றைப் பெரும் பித்தனே!
சட்ட நேர்பட வந்தி லாத
சழக்க னேன் உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னே சிறு
நாயி னுங்கடை யாய வெங்
கட்ட னேனையும் ஆட் கொள் வான் வந்து
காட்டி னாய் கழுக் குன்றிலே!
என்ற பாடல் வாயிலாகவும் உணர முடிகிறது.
கு.இ.VIII.3.